கிர்கிஸ்தானின் இஸ்ஸிக்-குல் ஏரியில் மூழ்கிய பட்டுப் பாதை நகரத்தை தொல்லியல் குழு கண்டுபிடித்தது
ரஷ்ய மற்றும் கிர்கிஸ் அறிவியல் அகாடமிகளின் தொல்லியல் குழு, கிர்கிஸ்தானின் இஸ்ஸிக்-குல் ஏரியில் மூழ்கிய ஒரு இடைக்கால வணிக மையத்தின் எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளது. இந்த நகரம் 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தால் மூழ்கியதாகக் கருதப்படுகிறது.
1 முதல் 4 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட நீருக்கடி ஆராய்ச்சியில் பழங்காலச் சாலைகள், பொதுக் கட்டிடங்கள் மற்றும் இறுதிச் சடங்கு வளாகங்கள் கண்டறியப்பட்டன. சுட்ட செங்கல் சுவர்கள் மற்றும் கல் ஆலைகள் போன்ற கண்டுபிடிப்புகள் முன்னேறிய நகர வடிவமைப்பைக் காட்டுகின்றன.
இஸ்லாமிய நாகரிகத்தின் தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இதில் மசூதி, பொதுக் குளியலறைகள், மதராசா மற்றும் 14 ஹெக்டேர் பரப்பளவில் முஸ்லிம் இறுதிச் சடங்கு வளாகம் ஆகியவை அடங்கும். சில கல்லறைகள் ஏரி அலைகளால் அரிக்கப்பட்டு, இஸ்லாமிய மரபுப்படி அடக்கம் செய்யப்பட்ட எலும்புக்கூடுகள் தெரியவந்துள்ளன.
இஸ்லாத்திற்கு முன்பு, இப்பகுதி டெங்க்ரிஸம், பௌத்தம் மற்றும் நெஸ்டோரியன் கிறிஸ்தவ மரபுகளுடன் பல கலாச்சாரமாக இருந்துள்ளது. சரியான நேரத்தை அறிய மர வளையங்கள் மற்றும் கதிரியக்கக்கரிம பகுப்பாய்வைப் பயன்படுத்தி மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதேநேரத்தில் அரிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பட்டுப் பாதையின் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
https://mozaik.inilah.com/news