ஆசியான் நடுக்கிழக்குப் பகுதியில் பதட்டத்தைக் குறைக்கக் கோருகிறது
நடுக்கிழக்குப் பகுதியில் அதிகரித்து வரும் மோதலைப் பற்றி ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் தீவிர கவலை தெரிவித்துள்ளனர். எல்லாப் பகுதியினரும் சர்வதேசச் சட்டத்தையும் ஐக்கிய நாடுகள் சாசனத்தையும் மதித்து, நிலைமையை மோசமாக்கக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து தவிர்த்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முதன்மை அளிக்க வேண்டுமென அவர்கள் கோருகின்றனர். உடனடியாக போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு, வேறுபாடுகள் இராஜதந்திரம் மற்றும் உரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
https://www.trtworld.com/artic