‘கட்டாய உழைப்பு’ போன்ற வரலாற்று குற்றங்களை ஜப்பான் அழிக்கக் கூடாது
ஜப்பானிய அரசியல்வாதி சனாயே தகாய்ச்சி, நாகசாகி அணுகுண்டு நினைவு நிகழ்வில் உணர்ச்சிபூர்வமான உரை நிகழ்த்தினார். ஜப்பானின் தற்போதைய ‘அணுசக்தியற்ற மூன்று கொள்கைகளை’ வலியுறுத்திய அவர், எதிர்காலத்திற்கான எந்த உறுதியும் அளிக்கவில்லை. அவரது கருத்து ஆசியாவில் ஜப்பானின் வரலாற்று ஆக்கிரமிப்பைப் புறக்கணித்தது. இந்தோனேசியாவில் ரோமுஷா கட்டாய உழைப்பு முறையில் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததும், ‘பெரும் கிழக்காசிய இணை செழிப்பு வட்டம்’ என்ற முழக்கத்தின் கீழ் எண்ணெய், ரப்பர் போன்ற வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் இதில் அடங்கும்.
ஜப்பான் மெதுவாக வரலாற்றைத் திருத்துவதாக மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, பாடப்புத்தகங்களில் ‘கட்டாய உழைப்பு’ என்ற சொல்லை ‘அணிதிரட்டல்’ என்று மாற்றுகிறது. அதேநேரம் தன்னைப் பாதிக்கப்பட்டவராகக் காட்டிக்கொள்கிறது. ஜூன் மாதம், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், ஜப்பானின் இராணுவ விரிவாக்கத்தின் அடையாளமான மிகாசா என்ற போர்க்கப்பலின் மாதிரியை இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவிற்கு இராஜதந்திரப் பரிசாக அளித்தார். இது பரவலான கண்டனத்தைப் பெற்றது. ஜப்பானிய அரசாங்கம் அணுசக்திக் கொள்கையைத் தளர்த்தவும் தயாராகி வருகிறது. இந்த இருமுக மனப்பான்மை விமரிசனத்தைத் தூண்டியுள்ளது.
பிப்ரவரியில், இந்தோனேசியா பள்ளி வரலாற்றுப் புத்தகங்களைத் திருத்தியது. அடக்குமுறையின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த ‘ஜப்பானிய இராணுவ ஆக்கிரமிப்பு’ என்பதை ‘ஜப்பானிய காலனித்துவ ஆட்சி’ என்று மாற்றியது. இந்த நடவடிக்கையும், போர்க்கப்பல் பரிசை நிராகரித்ததும், வெளிப்படையான விமர்சனமும், வரலாற்று நினைவுகளை அழிக்கும் ஜப்பானின் முயற்சிகளுக்கு எதிரான மறுப்பைக் காட்டுகின்றன. ஆசிய சமூகம், ஆக்கிரமிப்பை விடுதலையாகக் கட்டமைக்க முயலும் ஜப்பானின் வலதுசாரிக் குழுக்களின் விளையாட்டைப் புரிந்துகொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கட்டுரை வரலாற்றை மாற்ற முடியாது என்பதை வலியுறுத்துகிறது. நினைவுகளைத் திருத்துவதற்குப் பதிலாக மன்னிப்புக் கேட்டு சுயசிந்தனை செய்யுமாறு ஜப்பான் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதைத் தொடர்ந்து புறக்கணித்தால், அண்டை நாடுகளின் நம்பிக்கையை ஜப்பான் இழக்கும் ஆபத்து உள்ளது.
https://www.gelora.co/2026/08/